இன்றைய ராசிபலன்
Today Rasi Palan இன்றைய பஞ்சாங்கம் 19-10-2019, ஐப்பசி 02, சனிக்கிழமை, பஞ்சமி திதி காலை 07.44 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. மிருகசீரிஷம் நட்சத்திரம் மாலை 05.40 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் – மதியம் 01.30-03.00, குளிகன் -காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00. மேஷம் இன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகலாம். பிள்ளைகளின் படிப்பில் சற்று முன்னேற்ற நிலை உருவாகும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும். உறவினர்கள் உதவிகரம் நீட்டுவர். ரிஷபம் இன்று கூட்டுத் தொழில் புரிபவர்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். நெருங்கிவர்களும் சாதகமாக செயல்படுவார்கள். எதிர்பார்த்த உதவிகளும் தாமதமின்றி கிடைக்கும். உத்தியோக ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொன் பொருள் சேரும். மிதுனம் இன்று குடும்பத்தில...